மகள் கொடுமை தாங்க முடியலை கருணை கொலை செய்ய உதவுங்கள்: தேனி கலெக்டரிடம் மூதாட்டி மனு
2022-11-27@ 11:54:32

தேனி: மகளின் கொடுமை தாங்க முடியாத தாய், தன்னை கருணை கொலை செய்யக் கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காலனியில் வசிப்பவர் பெருமாள் மனைவி பாக்கியலட்சுமி (62). இவர் நேற்று தேனி கலெக்டர் முரளீதரனிடம் மனு அளித்தார். அவர் கூறியதாவது: எனக்கு 2 மகள்கள் உள்ளனர்.
திருமணமாகி விட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இறந்து விட்டார். 2வது மகளின் கணவர் இறந்து விட்டார். இதனால் அவர், வேறு ஒரு நபருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருகிறார். நான் வருமானத்துக்காக தனியார் பள்ளியில் சமையல் வேலை செய்து வருகிறேன். சிவனடியாராகவும் இருந்து வருகிறேன். என்னை இறைவழிபாடு செய்ய விடாமல் 2வது மகளும், அவருடன் உள்ள நபரும் தடுக்கின்றனர்.
மேலும், எனது 3 பவுன் செயினை எடுத்துக்காண்டு தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர். எனக்கு சொந்தமான வீட்டை, ஆதரவற்றோருக்கு வழங்குவதுடன், என்னையும் கருணை கொலை செய்து கொள்ள உதவுமாறு மனுவில் தெரிவித்துள்ளேன். இவ்வாறு கூறினார். பெற்ற மகளின் கொடுமை தாங்க முடியாத தாய், தன்னை கருணை கொலை செய்ய சொல்லி கலெக்டரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!