போதைப்பொருள் விற்ற வழக்கில் தான்சானியா பெண் உட்பட 4 பேர் கைது
2022-11-27@ 00:05:08

சென்னை: போதைப்பொருள் விற்ற வழக்கில், தான்சானியா பெண் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து, தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் கடந்த 12ம் தேதி போதை பொருட்கள் விற்பனை செய்த ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பிரிஸ்காஅம்சா(32) கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள சுமார் 10 கிராம் கொண்ட கொகைன் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கடந்த 23ம் தேதி பிரிஸ்கா அம்சாவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவல்படி, கோவையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில், 3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததும், நேற்று முன்தினம் பிரிஸ்காஅம்சாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!