கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கிய பின் ஆஸ்துமா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: லண்டன் குயின் மேரி பல்கலை தகவல்
2022-11-26@ 20:58:05

லண்டன்: கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கிய பின்னர் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு வரும் வயதானவர்கள் இருமடங்கு ஆபத்துகளை சந்தித்து வருகின்றனர். ஆஸ்துமா நோயின் அறிகுறிகளும் முன்பைவிட அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்களும், உலகளவில் 30 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்துமா நோய்க்கான முக்கிய அறிகுறிகளாக மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல், இருமல் ஆகியவற்றை குறிப்பிடலாம். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், மக்கள் முகக் கவசங்களை அணிவதை தவிர்த்துவிட்டனர். அதனால் சுவாச நோய்த்தொற்றுகள் பரவுகின்றன. மற்ற சுவாச நோய்த்தொற்றுகளைக் காட்டிலும் ெகாரோனாவால் ஏற்பட்டுள்ள ஆஸ்துமா முக்கியமானதாக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் சுவாச தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியரும், மருத்துவ பேராசிரியருமான அட்ரியன் மார்டினோ கூறுகையில், ‘கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் ஆஸ்துமா தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் காரணத்தையும்-விளைவையும் நிரூபிக்க முடியாது. முகக்கவசம் அணிதல், சுவாச நோய்களை கண்டறிந்து தடுத்தல் மூலமே ஆஸ்துமாவில் இருந்து தப்ப முடியும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
இலங்கையின் 75வது சுதந்திர தினம் கறுப்பு நாளாக அனுசரிக்கும் தமிழ் மக்கள்: கடையடைப்பு, போராட்டத்தால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியான பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!