நீதித்துறையை மக்கள் அணுகும் நிலை மாறி நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
2022-11-26@ 17:11:56

டெல்லி: நீதித்துறையை மக்கள் அணுகும் முறை மாறி நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன நாடாளுமன்றத்தால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசன தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்; சட்டங்கள் மூலம் சமத்துவத்தை நிலைநாட்ட விளிம்பு நிலை மக்களே காரணம் என்கிறார். மேலும் சட்டத்துறையில் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை போன்ற நாட்டில் நீதி வழங்கும் நடைமுறை என்பது எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே நீதித்துறை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால் என்றார். இந்த சவால்களை அர்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகள் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
மேலும் செய்திகள்
அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மனைவி பரபரப்பு புகார்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!