ஆவடி அருகே பரபரப்பு; எல்இடி டிவி வெடித்து சிதறியதில் பயங்கர தீ
2022-11-26@ 16:44:13

ஆவடி: ஆவடி அருகே நந்தவனமேட்டூர், வேதநாயகம் முதல் தெருவை சேர்ந்தவர் தாமஸ் (36). பெயின்டர். இவர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் முதல் தளத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் வேய்ந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை எல்இடி டிவியில் தாமஸ், மனைவி மற்றும் 2 குழந்தைகள் படம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்கசிவு காரணமாக எல்இடி டிவி வெடித்து சிதறி தீப்பற்றியது.
சிறிது நேரத்தில் மளமளவென வீடு முழுவதும் தீ பரவி, அனைத்து பொருட்களும் கொழுந்துவிட்டு எரிந்தன. தாமஸ் மற்றும் மனைவி, 2 குழந்தைகள் அலறியடித்து வெளியே ஓடினர். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். தகவலறிந்து ஆவடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தாமசின் வீடு குறுகலான சந்தில் உள்ளதால், பக்கத்து குடியிருப்பில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ₹2 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாகத்தான் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்
தற்கொலை செய்துகொண்ட ‘டிக்டாக்’ புகழ் ரமேஷ் வீடியோவால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாலிபர் படுகொலை: கணவனுக்கு வலை, ஆட்டோ டிரைவர் கைது
கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!