திருவொற்றியூரில் சேதமான சாலையால் மக்கள் அவதி
2022-11-26@ 16:41:43

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் சேதமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அவற்றை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் நகர் சாலை உள்ளது. இதன் வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. சமீபத்திய மழையால் சேதமான சாலையில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், சில நேரங்களில் தடுமாறி விழுந்து அடிபடுகின்றனர்.
சீருடைகள் சேதமாவதுடன் காயமும் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களில் செல்பவர்களும் மேடுபள்ளங்களில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும், சேதமான சாலையையொட்டி, ரயில்வே துறைக்கு சொந்தமான மழைநீர் குட்டை உள்ளது. இதன் வழியாக நடந்து செல்பவர்கள் மீது மழைநீர் தெறிப்பதை தடுக்க முயற்சிக்கும்போது அந்த குட்டையில் விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த சேதமான சாலையை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்
தற்கொலை செய்துகொண்ட ‘டிக்டாக்’ புகழ் ரமேஷ் வீடியோவால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாலிபர் படுகொலை: கணவனுக்கு வலை, ஆட்டோ டிரைவர் கைது
கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!