இளம்பெண் செல்போனுக்கு நிர்வாண படம்: போலி சாமியார் கைது
2022-11-26@ 16:23:03

அரூர்: அரூர் அருகே இளம்பெண் செல்போனுக்கு நிர்வாண படம் அனுப்பிய போலி சாமியார் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளுவபுரத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது வீட்டிற்கு கடந்த 19ம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எருக்கம்பட்டுவை சேர்ந்த போலி சாமியார் சின்னதுரை (40) என்பவர் வந்துள்ளார். அப்போது, வீட்டின் பின்புறம் செய்வினை உள்ளதாகவும், அதை நீக்க பூஜை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, பூஜை பொருட்கள் வாங்க சின்னதுரையை அழைத்துக்கொண்டு மனோகரன் அரூர் வந்த போது, போலீசில் பிடித்து கொடுத்து விடுவார் என்ற பயத்தில் டூவீலரில் இருந்து சின்னதுரை குதித்து ஓடி விட்டார். தொடர்ந்து, சின்னதுரையை செல்போனில் தொடர்பு கொண்ட மனோகரன் ஏன் பூஜை செய்யாமல் சென்று விட்டீர்கள் என்று கேட்டபோது, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் மனோகரன் மகளின் செல்போனுக்கு ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை சின்னதுரை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் போலீசில் மனோகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்
அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மண்எண்ணெய் ஊற்றி மனைவி எரித்து கொலை கணவனுக்கு ஆயுள் சிறை
கத்திமுனையில் மிரட்டி ஓட்டல் ஊழியரிடம் வழிப்பறி
நகை திருடிய வேலைக்கார பெண் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!