உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா; 45 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு
2022-11-26@ 15:19:58

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சாலவாக்கம் ஒன்றிய இளைஞரணி சார்பில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் விழா சாலவாக்கம் கிராமத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் வரவேற்றார். சாலவாக்கம் கிராமம் திமுக கொடிகளாலும் தோரணத்தினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 45 கிலோ கேக் வெட்டி சிறுவர், சிறுமியர், ஏழை, எளியவர்களுக்கு எம்எல்ஏ க.சுந்தர் வழங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். இளைஞர்கள் தங்களால் முயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடவேண்டும். நிர்வாகிகள் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் என்.எஸ்.ரவி, ஞானசேகர், தமிழ்வேந்தன், சுஜாதா, பாலமுருகன், பாண்டியன், பாபு ஷரீப், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், மணி, முரளி, விஷ்ணு, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரைவேல், சேகர், கல்யாணசுந்தரம், நதியா கோபி, சுப்பிரமணி, அன்புராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞரணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்
தற்கொலை செய்துகொண்ட ‘டிக்டாக்’ புகழ் ரமேஷ் வீடியோவால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாலிபர் படுகொலை: கணவனுக்கு வலை, ஆட்டோ டிரைவர் கைது
கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!