புதிய பல்சர் பி150 பைக் பஜாஜ் அறிமுகம்
2022-11-24@ 00:12:17

சென்னை: பஜாஜ் நிறுவனம், பல்சர் பி150 என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்குகள் மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்ப புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பி150 என்ற பைக்கை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் புத்தம் புதிய வடிவமைப்பு ஸ்போர்ட்டியான தோற்றத்தில், ஏரோடைனமிக் 3டி முன்பகுதி, யுஎஸ்பி சார்ர்வசதி, கியர் இன்டிகேட்டர் என பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஸ்க் பிரேக்குடன் உள்ளது. பின்புறம் புதிய மோனோ ஷாக் அப்சர்வர் இடம் பெற்றுள்ளது. இந்த பைக்கின் வடிவமைப்பு சிறப்பானதாக இருப்பதோடு, இரட்டை டிஸ்க் வேரியண்டில் முந்தைய மாடலை விட 10 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 149.68 சிசி இன்ஜின், அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 14.5 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 13.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பைக் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராகேஷ் சர்மா, ‘20 ஆண்டுக்கு முன்பு பல்சர் 150 புதிய ஸ்போர்ட்டியான பைக்காக களமிறக்கப்பட்டது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பைக்கின் மூலம் திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி... இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை!: சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704க்கு விற்பனை..!!
அதானி குழுமம் நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்துள்ள முதலீடுகளால் நஷ்டம் இல்லை: எல்.ஐ.சி. நிறுவனம் விளக்கம்
தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு ஒரு சவரன் ரூ.42,800க்கு விற்பனை: பொதுமக்கள் கலக்கம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42,800க்கு விற்பனை
அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.280 குறைந்தது
நிதி முறைகேடு, போலி பரிவர்த்தனை அறிக்கை எதிரொலி; 2வது நாளாக அதானி குழும பங்குகள் வீழ்ச்சி: ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!