அமெரிக்காவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கொலை
2022-10-07@ 02:19:25

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவில் கத்தி முனையில் கடத்தப்பட்ட இந்திய வம்சவாளியை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 4 சீக்கியர்களும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மெர்சிட் கவுண்டியை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங், ஜஸ்லீன் கவுர் தம்பதியினர். இவர்களுக்கு அரூஹி தேரி என்ற 8 மாத குழந்தை உள்ளது. இவர்களது உறவினர் அமன்தீப் சிங். இவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூரில் உள்ள ஹர்சி பின்டி பகுதியை (சீக்கியர் குடும்பத்தினர்) பூர்வீகமாக கொண்டவர்கள். இந்நிலையில், கடந்த திங்களன்று புதிதாக டிரக் வியாபாரத்தை தொடங்கி உள்ளனர். அங்கிருந்து 4 பேரும் கத்திமுனையில் கடத்தப்பட்டனர். அன்று மாலை அவர்களது கார் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக, மெர்சிட் கவுண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில், ஆர்சார்ட் பகுதியில் சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்த பண்ணை தொழிலாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சென்றுபார்த்தபோது, கடத்தப்பட்ட சீக்கிய குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் சடலமாக கிடந்தனர். இந்நிலையில், 4 பேரை கடத்தி செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் 47 வயதான இயேசு மனுவால் சல்காடோ என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
* பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
கலிபோர்னியாவில் சீக்கிய குடும்பம் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் பக்வந்த் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கலிபோர்னியாவில் 8 மாத பெண் குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கொல்லப்பட்டது குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். இது போன்ற கொடூர கொலை சம்பவமானது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள பஞ்சாப் மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. வெளியுறவு துறை அமைச்சர் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு
ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!