தொடர் விடுமுறையால் குவிந்தனர் சுற்றுலாப்பயணிகள்; குலுங்கியது கொடைக்கானல்
2022-10-06@ 15:09:54

கொடைக்கானல்: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். குணா குகை, மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக், பிரையண்ட் பூங்கா என அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வருகிறது. மேலும் ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் சைக்கிள் ரைடிங், குதிரை சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் நேற்று அதிக குளிர்ச்சி, அதிக வெயில் இல்லாமல் இதமான சூழல் நிலவியது. சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் விடுதிகள், உணவகங்கள், சாலையோர கடைகள், கைடுகளுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. சுற்றுலாப்பயணிகள் குவிந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். எனவே வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை காலங்களில் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
நாட்றம்பள்ளி தாலுகாவில் குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும்-தாசில்தாரிடம் மனு
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி-மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும்-கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை
ஆந்திர மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் டிரோன் மூலம் மறு ஆய்வு சர்வே பணியை விரைவுபடுத்த வேண்டும்-கலெக்டர்களுக்கு சிறப்பு தலைமை செயலாளர் உத்தரவு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!