சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.2.94 கோடி நகைகள் பறிமுதல்: கோவை விமானநிலையத்தில் 2 பேர் கைது
2022-10-06@ 00:45:04

பீளமேடு: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.2.94 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சில பயணிகள் தங்க நகைகள் கடத்தி வருவதாக கோவை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் கோவையில் தரையிறங்கியதும் அதில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். இதில் 5 பயணிகள் தங்கள் உடமைகளில் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
அவர்களில் 2 பயணிகள் தங்க சங்கிலி மற்றும் வளையல்களை சூட்கேஸ், பேண்ட் பாக்கெட் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தனர். அவர்களிடமிருந்து 5.6 கிலோ எடை உள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.2.94 கோடி. பிடிபட்ட முகம்மது அப்சல் (32) என்ற பயணியிடம் ரூ.1 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் இருந்ததால் அவரை ஜாமீனில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்ற பயணி ரூ. 50 லட்சத்துக்கும் குறைவான தங்க நகைகளை கடத்தி வந்ததால் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் 3 பேர் கொண்டு வந்த நகைகள் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக இருந்ததால் அவர்கள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
Singapore kidnapper confiscation of jewels Coimbatore airport 2 people arrested சிங்கப்பூர் கடத்தி நகைகள் பறிமுதல் கோவை விமானநிலைய 2 பேர் கைதுமேலும் செய்திகள்
நாகர்கோவிலில் பரோட்டா கடை உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக நிர்வாகி ரமேஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
சென்னையில் நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையில் 145 வாகனங்கள் பறிமுதல்: காவல்துறை நடவடிக்கை
சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணி போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது
திருப்பதி அருகே ₹98 லட்சம் மதிப்புள்ள 25 உயர் ரக செம்மரக் கட்டைகளை கடத்திய ஒருவர் கைது-தப்பிச்சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகனை கொலை செய்த சங்கர் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள்
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய இருவர் கைது பணிப்பெண்ணிடம் இருந்து 100 சவரன் பறிமுதல்: நகையை வங்கியில் விற்பனை செய்து வீட்டு மனை வாங்கியது அம்பலம்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!