SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்முவில் என்கவுன்டர் 4 தீவிரவாதிகள் சாவு

2022-10-06@ 00:43:36

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த இரண்டு என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் டிராச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இதில் இரண்டு பேர் ஹனான் பின் யாகூப் மற்றும் ஜாம்ஷெட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 2ம் தேதி சிறப்பு போலீஸ் அதிகாரி ஜாவீத் தர் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்