சோழவரம் அருகே குட்கா கடத்தி வந்த 5 பேர் கைது: 3 கார், 100 கிலோ பறிமுதல்
2022-10-05@ 16:03:35

புழல்: ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் போதை இல்லா தமிழகம் என்பதன் தொடர் நடவடிக்கையாக, செங்குன்றம் உதவி ஆணையர் மணிவண்ணன் உத்தரவின்பேரில், நேற்றிரவு சோழவரம் அருகே செம்புலிவரம், செங்காளம்மன் கோயில் எதிரே இன்ஸ்பெக்டர் ஜெகந்நாதன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த 3 கார்களை மடக்கி சோதனை செய்தனர்.
அவைகளில், 100 கிலோ குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காரில் இருந்த 5 பேரையும் பிடித்து, சோழவரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் செங்குன்றம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சந்திராராம் (24), நாராயணலால் (25), ஜெயபால் (39), கணேசன் (45), தங்கமாரியப்பன் (48) என தெரியவந்தது.
இவர்கள் கடந்த சில மாதங்களாக பெங்களூரில் இருந்து குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை கார்களில் கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கார்கள், 100 கிலோ குட்கா போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய இருவர் கைது பணிப்பெண்ணிடம் இருந்து 100 சவரன் பறிமுதல்: நகையை வங்கியில் விற்பனை செய்து வீட்டு மனை வாங்கியது அம்பலம்
இணையதள முறைகேடு வழக்கில் கேரள இளைஞர்கள் சிக்கினர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை பக்கத்து வீட்டுக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை
கல்லூரி மாணவியிடம் செயின் பறித்தவர் கைது
திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 16 கிலோ பறிமுதல்
செம்மரக் கட்டைகள் பறிமுதல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!