சர்ச்சை பேச்சு எதிரொலி; பீகார் அமைச்சர் திடீர் ராஜினாமா
2022-10-03@ 01:28:38

பாட்னா: நிதிஷ் குமார் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய பீகார் வேளாண் அமைச்சர் சுதாகர் சிங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகார், கைமூரில் நடந்த கூட்டத்தில் சமீபத்தில் பேசிய மாநில அமைச்சர் சுதாகர் சிங், “எங்கள் துறையில் (வேளாண் துறை) திருட்டுச் செயல்களைச் செய்யாத ஒரு பிரிவுகூட இல்லை. மேலும், இந்தத் துறையின் பொறுப்பாளராக நானே இருப்பதால், அத்தகையவர்களுக்கு நானே தலைவராகவும் ஆகிவிட்டேன். அதோடு, விதைக் கழகம் வழங்கும் விதைகளை எந்த விவசாயியும் தன்னுடைய வயல்களில் பயன்படுத்துவதில்லை. தரமான நெல் சாகுபடி செய்ய வேண்டிய விவசாயிகள், பீகார் மாநில விதைக் கழகத்தின் நெல் விதைகளை எடுப்பதில்லை.
விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதற்குப் பதிலாக, விதை நிறுவனங்கள் ரூ.100 முதல் 150 கோடி திருடுகின்றன. தற்போது மாவட்டத்திலிருந்து இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அதற்குப் பிறகும் நிலைமை மாறவில்லை என்றால், அமைச்சராகி என்ன பலன்? கைமூர் மாவட்டம் ஊழல் அதிகாரிகளால் நிறைந்துள்ளது” என்றார். அவர் தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த நிலையில் நேற்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வியாதவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதை அவரது தந்தையும் மாநில ஆர்ஜேடி தலைவருமான ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
எதிர்கட்சிகளின் முழக்கம் காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..!
இந்தியாவில் 2025க்குள் காசநோயை முழுவதுமாக ஒழிப்பதே நமது குறிக்கோள்: காசநோய் ஒழிப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது: உச்ச நீதிமன்றத்தில் 14 எதிர்க்கட்சிகள் மனு தாக்கல்!
அதானி குழுமத்தை தொடர்ந்து ஜேக் டோர்சி மீது ஹிண்டன்பர்க் புகார்: ரூ.8,200 கோடி அளவுக்கு முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு..!!
இலங்கை சிறையில் உள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு..!!
புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்; தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவோம்: முதல்வர் ரங்கசாமி உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!