நடிகர் கிருஷ்ணம் ராஜு பெயரில் அறக்கட்டளை தொடங்கிய பிரபாஸ்
2022-10-02@ 01:58:23

ஐதராபாத்: சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம் ராஜுவின் சொந்த ஊரான மொகல்
தூரில் அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் பிரபாஸ், ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கு விருந்து வழங்கினார் பிரபாஸ். பிறகு ரசிகர்களிடையே அவர் பேசினார்.
கிருஷ்ணம் ராஜு பெயரில் அறக்கட்டளை தொடங்கு வதாகவும், இதன் மூலம் நலிந்தவர்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவி அளிக்கப்படும் என்றும், அதற்கு முதற்கட்டமாக 3 கோடி ரூபாய் நிதி வழங்குவதாகவும் அறிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய ரோஜா, ஆந்திர முதல்வருடன் கலந்து பேசி, கிருஷ்ணம் ராஜு பிறந்த ஊரில் அவருக்கு நினைவு மண்டபம் கட்ட ஏற்பாடு செய்யப்போவதாகவும், அதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும் அறிவித்தார். மறைந்த நடிகர் கிருஷ்ணம் ராஜு, பிரபாஸின் பெரியப்பா ஆவார்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!
ராகுல் காந்தி தகுதிநீக்கம்; மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மேலும் 9 பேர் உயிரிழப்பு.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் காலமானார்!!
எந்த தடையும் மக்களை கட்டுப்படுத்தாது பாகிஸ்தானை சீரமைக்க பெரிய அறுவை சிகிச்சை தேவை: இம்ரான் கான் ஆவேசம்
பான் மசாலா,சிகரெட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி