அதிவேக 5ஜி சேவை இன்று தொடக்கம்; ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு அடித்தது யோகம்.! ஒடிசாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி
2022-10-01@ 14:44:55

மயூர்பஞ்ச்: இன்று முதல் 5ஜி சேவை தொடங்கிய நிலையில் ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய மொபைல் காங்கிரஸின் தொடக்க விழாவில் பங்ேகற்ற பிரதமர் மோடி, இன்று 5ஜி தொலைதொடர்பு சேவையை தொடங்கிவைத்தார். இந்த சேவை படிப்படியாக அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் மறைந்த கணவருக்காக நிறுவப்பட்ட எஸ்எல்எஸ் ரெசிடென்ஷியல் பள்ளிக்கு 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்தப் பள்ளி ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பஹாத்பூரில் உள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக அதிவேக 5ஜி சேவையை பயன்படுத்தும் முதல்பள்ளியாக ஜனாதிபதியின் கணவரால் நிறுவப்பட்ட பள்ளிக்கு கிடைத்துள்ளது. இத்திட்டத்தால் அப்பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் நாட்டிலேயே முதன்முறையாக 5ஜி சேவையைப் பயன்படுத்தும் முதல் பயனர்களாக இருப்பார்கள். முன்னதாக நேற்று 5ஜி சேவையை வழங்குதற்காக ரிலையன்ஸ் ஜியோ லிமிடெட்டின் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தில் தற்காலிக 5ஜி கோபுரத்தை அமைத்தனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், ‘ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கணவர் ஷியாம் சரண் முர்மு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அதனால் கணவர் வாழ்ந்த மூதாதையர் இடத்தை அவரது மாமியார், ரெசிடென்ஷியல் பள்ளியாக மாற்றினார். அப்போதிருந்தே திரவுபதி முர்மு இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் உதவினார். ஜார்கண்ட் ஆளுநராக இருந்த காலத்திலும், பள்ளிக்கு தவறாமல் வந்து ெசல்வார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்தக் கிராமப் பள்ளியின் தலைவராகவும் திரவுபதி முர்மு இருந்தார். குடியரசு தலைவராக தேர்வான பின்னர், அந்தப் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவரது மகள் பள்ளியின் தலைவராக உள்ளார்’ என்றார்.
மேலும் செய்திகள்
இறுதி வாய்ப்பு: உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி.. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்..!!
கேரளாவில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்கும் வினோத திருவிழா: கொல்லம் அருகே கொட்டம்குளக்கரா தேவி கோயிலில் வழிபாடு
சீனாவில் இருந்து 54 நேரடி முதலீடு திட்டங்கள் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு சென்று திரும்பியபோது பேருந்து கவிழ்ந்து விபத்து
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு
ஏப்ரல் முதல் வலி நிவாரணிகள், ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% உயர்கிறது.!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!