மனித குண்டு தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 19 மாணவர்கள் பலி
2022-10-01@ 01:11:12

காபூல்: ஆப்கானிஸ்தானில் கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் பலியாகினர். ஆப்கானிதான் தலைநகர் காபூல் அருகே ஷியா பிரிவை சேர்ந்த ஹஜரா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் டாஷ்ட் இ பார்ச் பகுதியில், காஜ் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த கல்வி நிறுவனத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவ, மாணவிகள் 19 பேர் பலியாகினர். மேலும், 27 பேர் காயமடைந்தனர்.
சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால், நேற்றயை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேலும் செய்திகள்
கொரோனாவுக்கு உலக அளவில் 6,821,951 பேர் பலி
ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை: உகாண்டா அரசு அதிரடி
அமெரிக்காவில் வெள்ளம் ரயில் தடம் புரண்டு விபத்து
மேகாலயா சட்டப்பேரவையில் இந்தியில் பேசிய கவர்னருக்கு எதிர்ப்பு: 4 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்: அதிபர் விக்ரமசிங்கே வலியுறுத்தல்
ஜப்பான், சீன தலைவர்கள் உக்ரைன், ரஷ்யாவுக்கு பயணம்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!