பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா விளக்கம்
2022-10-01@ 00:09:36

சென்னை: பண்டிகைகாலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவே நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா விளக்கமளித்துள்ளார். தெற்கு ரயில்வே சார்பில் ‘யுவர் ப்ளாட்ஃபார்ம்’ என்ற மாதாந்திர இதழ் வெளியீட்டு விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த இதழின் முதல் பிரதியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா மற்றும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் ஆகியோர் வெளியிட்டனர். அதனை தொடர்ந்து சென்னை பெங்களூர் செல்லும் டபுள் டெக்கர் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு இந்த இதழ் விநியோகிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய ரயில்வேயின் பாரம்பரியம், கலாசார பெருமையை தெரிந்துகொள்ளும் விதமாக யுவர் பிளாட்ஃபார்ம் என்ற மாதந்திர இதழ் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த இதழ் ராஜ்தானி, சதாப்தி, டபுள் டெக்கர் போன்ற ரயில் பயணிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இந்த இதழ் மூலம் பயணிகள் மற்றும் தெற்கு ரயில்வேக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படும். மேலும், பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பயணிகள் இடையூறு இல்லாமல் பயணிக்கவே நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி