தமிழக மீனவர்கள் வழக்கு ஒன்றிய அரசுக்கு 14 நாட்கள் கெடு
2022-10-01@ 00:04:36

புதுடெல்லி: ‘தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் அக்டோபர் 14க்குள் பதிலளிக்க வேண்டும்,’ என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஒன்றிய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என கோரியுள்ளார். இதை கடந்த மாதம் 2ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில், நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், ‘இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் வேண்டும்,’ என்றார். அதை ஏற்ற நீதிபதிகள், அக்டோபர் 14ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கையும் ஒத்திவைத்தனர்.
Tags:
Tamilnadu fishermen case united government 14 days தமிழக மீனவர்கள் வழக்கு ஒன்றிய அரசு 14 நாட்கள் கெடுமேலும் செய்திகள்
முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல்
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வரின் மகள் அமலாக்கத்துறை ஆபீசில் ஆஜர்
ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது
போலி ஆவணம் தாக்கல்: தனித்தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் எம்எல்ஏ பதவி ரத்து.! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை: இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை
வங்கதேசத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 19 பேர் பலி
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!
துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!