தா.பழூர் அருகே நாய்கள் கடித்து மான் பலி
2022-09-30@ 20:13:13

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக மான்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த பகுதியை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளதால் இரை தேடி மான்கள் வந்து செல்கின்றன. சில மாதங்களுக்கு முன் 2 மான்கள் கம்பி வேலியில் சிக்கிய நிலையில் பொதுமக்கள் மீட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு வயதான பெண் மான், மைக்கேல்பட்டி கிராமத்துக்குள் நேற்று புகுந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த நாய்கள் துரத்தி மான் குட்டியை கடித்து குதறியது.
இதனால் நாய்களிடமிருந்து தப்பித்து ஒரு வீட்டுக்குள் மான்குட்டி புகுந்தது. இதை பார்த்த பொதுமக்கள், மான் குட்டியை பிடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் வந்து மான் குட்டியை மீட்டு பெற்றுக்கொண்டு அரியலூருக்கு கொண்டு சென்றனர். ஆனால் நாய்கள் கடித்ததில் காயமடைந்து செல்லும் வழியிலேயே மான் குட்டி இறந்தது. இதையடுத்து கீழப்பழுவூரில் உள்ள கால்நடை மருத்துவமனை கால்நடை உதவி மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து மான்குட்டியை அடக்கம் செய்தனர்.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!