இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள்
2022-09-30@ 00:26:10

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளையொட்டி தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை சென்னையில் இருந்து மாநிலம் முழுவதும் இயக்குகிறது. இதனால், பயணிகள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்க போக்குவரத்து நிர்வாகம் கோயம்பேடு, பூந்தமல்லி மற்றும் மாதவரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்தை இயக்குகிறது. இந்த இடத்துக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்து இணைப்பு பேருந்தாக மாநகர பேருந்துகள் 24 மணிநேரமும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இதுவரை 47 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் வரும் 4, 5ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. நெரிசலின்றி பொதுமக்கள் பயணிக்கும் வகையில் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதைப்போன்று பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
டான்செட், சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி