SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையில் செயற்கை நீருற்று அமைப்பு

2022-09-29@ 18:25:49

நெல்லை: நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு சீரமைப்புகள் பணிகள் நடைபெற்று வருகின்றன. பஸ் நிலையம், விளையாட்டு அரங்கம், கூட்ட அரங்கம், நவீன காய்கனி சந்தை உள்ளிட்ட திட்டப்பணிகள் மட்டுமின்றி நகரை அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதன்படி வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலத்தில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு இரவில் ஒளிரும் நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளின் மைய தடுப்பு பகுதியில் அதிக வெளிச்சம் தரும் நவீன மின் கம்பங்களுடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. சாலை விரிவாக்கப் பணிகளும் நடைபெறுகின்றன.

இதன் தொடர்ச்சியாக நெல்லை கேடிசி நகர் நான்குவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை சந்திப்பு ரவுண்டானாவில் செயற்கை நீருற்று அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. இதில் வண்ண மின் விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன. இதனால் இரவு நேரத்தில் வண்ண நிறத்தில் நீருற்று காட்சியை ரசிக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்