நெல்லையில் செயற்கை நீருற்று அமைப்பு
2022-09-29@ 18:25:49

நெல்லை: நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு சீரமைப்புகள் பணிகள் நடைபெற்று வருகின்றன. பஸ் நிலையம், விளையாட்டு அரங்கம், கூட்ட அரங்கம், நவீன காய்கனி சந்தை உள்ளிட்ட திட்டப்பணிகள் மட்டுமின்றி நகரை அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதன்படி வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலத்தில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு இரவில் ஒளிரும் நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளின் மைய தடுப்பு பகுதியில் அதிக வெளிச்சம் தரும் நவீன மின் கம்பங்களுடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. சாலை விரிவாக்கப் பணிகளும் நடைபெறுகின்றன.
இதன் தொடர்ச்சியாக நெல்லை கேடிசி நகர் நான்குவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை சந்திப்பு ரவுண்டானாவில் செயற்கை நீருற்று அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. இதில் வண்ண மின் விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன. இதனால் இரவு நேரத்தில் வண்ண நிறத்தில் நீருற்று காட்சியை ரசிக்கலாம்.
மேலும் செய்திகள்
தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கியதால் 5,000 கோழிகள் தீயில் கருகி நாசம்
ரூ.24.98 கோடி நிதி ஒதுக்கீடு: வைகை அணை-பேரணை இடையே பாசன கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்படுமா?: ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்ப்பு
காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி., ஆய்வு
பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி