சாலையை சீரமைக்க கோரிக்கை
2022-09-28@ 19:31:32

காளையார்கோவில்: மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவிலிலிருந்து நடராஜபுரம் வரை சுமார் 8 கிலோமீட்டர் சாலை செல்கிறது. இந்த சாலையை தான் மோர்க்குழி, அய்யனார்குளம், அரியநாச்சி குடியிருப்பு, பனங்குடி, நடராஜபுரம் பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டது. அதன்பின்னர் பராமரிக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலை மிகவும் மோசமாக உள்ளதால் இந்த கிராமங்களுக்கு அவசர காலத்திற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் கூட வர மறுக்கின்றனர். இந்தச் சாலையை விரைவில் சீரமைத்தால் காளையார்கோவில் பகுதி மக்கள் மிக அருகில் உள்ள பனங்குடி ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் சேவையை பயன்படுத்த ஏதுவாக இருக்கும். மேலும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் பல பகுதிகள் இதன் மூலம் குறுகிய தூரத்தில் இணைக்கப்படும். எனவே இந்தச் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கியதால் 5,000 கோழிகள் தீயில் கருகி நாசம்
ரூ.24.98 கோடி நிதி ஒதுக்கீடு: வைகை அணை-பேரணை இடையே பாசன கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்படுமா?: ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்ப்பு
காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி., ஆய்வு
பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி