சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் எவ்வளவு?: 19வது நாளாக அதிகாரிகள் நகை சரிபார்ப்பு பணி..!!
2022-09-28@ 14:24:55

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 19வது நாளாக நகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நகை சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் குழு ஆய்வு செய்து வருகிறது. சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில நேரங்களில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் முதன் முதலாக கடந்த 1955ம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் கோவிலில் நகைகள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. தற்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் உள்ளன. சிதம்பரம் கோயிலில் உள்ள நகைகள் அனைத்தும் 2005ம் ஆண்டுக்கு முன்னர் கடைசியாக ஆய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு கோயிலுக்கு வந்த புதிய நகைகள் எதுவும் ஆய்வு செய்யப்படவில்லை. 2005 முதல் 2022 ஜனவரி வரை கோயிலுக்கு கிடைத்த நகைகள் 19வது நாளாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நகைகளை சரிபார்க்கும் பணி சில நாட்களில் நிறைவு பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி