விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைவு: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ கேரட் ரூ.100ஐ கடந்து தொடர்ந்து உச்சம்..!!
2022-09-28@ 10:29:25

சென்னை: சென்னையில் ஒரு கிலோ கேரட் ரூ.100ஐ கடந்து தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ கேரட் ரூ.120க்கு விற்பனையாகிறது. விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைவு காரணமாக கேரட் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கேரட் விலை அடுத்த 2 வாரங்களுக்கு உச்சத்தில் இருக்கும் என்று கோயம்பேடு வியாபாரிகள் கூறுகின்றனர். கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 2,000 மூட்டைகள் வந்த நிலையில் தற்போது 500 மூட்டைகளே வருகின்றன.
பீட்ருட் விலை கிலோவுக்கு ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவைகளில் பெரியளவில் மாற்றம் இல்லை. பீன்ஸ் விலை ரூ.50 வரை விற்பனையாகிறது. கேரட் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைவாக உள்ளது. சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.25ல் இருந்து ரூ.30 வரை விற்கப்படுகிறது. மொத்த விலையை ஒப்பிடுகையில் சில்லறை விலையின் தாக்கம் அதிகளவில் உள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி