தாவுத் இப்ராகிமின் கூட்டாளி கைது
2022-09-28@ 00:02:56

மும்பை: மும்பையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிமின் கூட்டாளி கைது செய்யப்பட்டார். நிழல் உலக தாதாவான தாவூத் இம்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஷ் பதி. இவரை, மும்பை காவல்துறையின் மிரட்டி பணம் பறித்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அந்தேரியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பதி மற்றும் தாவுத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளரான சோட்டா சகிலின் கூட்டாளி சலீம் புரூட் (எ) முகமது சலீம் இக்பால் குரோஷி ஆகியோர் வெர்சோவா வர்த்தகரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். அந்த வர்த்தகரிடம் இருந்து பதியும், சலிம் புரூட்டும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.7.5 லட்சம் பணம் ஆகியவற்றை மிரட்டி பறித்துள்ளனர். இந்த வழக்கில் பதி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். சலீம் புரூட்டும் ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் விரைவில் 6ஜி தொலை தொடர்பு சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு!!
திடிரேன பற்றி எரிந்த குழந்தைகள் ஐசியூ: நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின
பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி: உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜக முடிவு
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500-ஆக உயர்வு: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்
சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை எப்போது?.. ஒன்றிய அரசு பதில்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமை மசோதா: அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!