உளுந்தூர்பேட்டை அருகே பாமாயில் ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; ஆறாக ஓடிய பாமாயில்
2022-09-27@ 18:48:16

உளுந்தூர்பேட்டை: சென்னை மணலியில் இருந்து 40 டன் பாமாயில் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகேசன் (48) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி என்ற இடம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி சென்ற டிரைவர் முருகேசன் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். லாரியிலிருந்து வெளியேறிய பாமாயிலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாளி மற்றும் கேன்களில் பிடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் அவர்களை விரட்டிவிட்டு ஊழியர்கள் மூலம் உடைப்பை சரி செய்தனர். இருப்பினும் சுமார் 2 டன் அளவிற்கு பாமாயில் டேங்கரிலிருந்து வெளியேறி ஆறாக ஓடியது. இதனை தொடர்ந்து இரண்டு கிரேன்கள் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். லாரியை மீட்கும் போது உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கியதால் 5,000 கோழிகள் தீயில் கருகி நாசம்
ரூ.24.98 கோடி நிதி ஒதுக்கீடு: வைகை அணை-பேரணை இடையே பாசன கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்படுமா?: ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்ப்பு
காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி., ஆய்வு
பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி