விபத்துகளை தவிர்க்க சிறு பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்
2022-09-27@ 14:56:09

*பொதுமக்கள், வாகனஓட்டிகள் வலியுறுத்தல்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் நடந்து வரும் சிறு பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் சாத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டு இடங்களில் சிறுபாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், இரண்டு இடங்களில் பால பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளம் தோண்டி வைத்துள்ள பகுதியிலிருந்து சிறிது தூரத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளதால் குடிமகன்கள் இரவு நேரத்தில் தடுமாறி பள்ளத்தில் விழும் நிலை உள்ளது.
மேலும் அதிவேகமாக செல்லும் இரு சக்கர வாகனங்களும் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. தினந்தோறும் இந்த சாலையின் வழியே பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பேருந்துகள், கார்கள் உள்ளிட்டவைகள் அதிகளவு சென்று வருகின்றன. சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் சாக்காங்குடி, கிளியனூர், ஒரத்தூர், பரதூர், சாத்தமங்கலம், பூதங்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் அமைந்துள்ளன. மேலும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் சுயநிதி மேல்நிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
ஏற்கனவே குறுகலான சாலை என்பதால் வாகன விபத்துகள் அதிகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. தற்போது சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சிறுபாலம் கட்ட பள்ளம் தோண்டப் பட்டுள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் மண்சரிவு ஏற்பட்டு சாலை சேறும், சகதியுமாக ஆகிவிடுகிறது.
எனவே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு முன்னெச்சரிக்கையாக சிதம்பரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் விரைந்து நெடுஞ்சாலையில் சிறு பாலப்பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழக வனத்துறையின் முதல் மோப்பநாய் சிமி உயிரிழந்தது: வனத்துறை மரியாதையுடன் உடல் அடக்கம்
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிக்கு களக்காடு புலிகள் காப்பகத்தில் 30 இடங்களில் 60 அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தம்
கொடைக்கானலின் பசுமைக்கு ஆபத்து; காட்டுத்தீயின் கோரத்தால் கட்டாந்தரையானது வனம்: உணவின்றி திண்டாடும் வனவிலங்குகள்
கீழடி அருகே திருப்புவனம் பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு
பதனீர் சீசன் துவக்கம் மாவட்டத்தில் கருப்பட்டி தயாரிப்பு பணி மும்முரம்: பனை மேம்பாடுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
பார்த்திபனூர் அருகே பாண்டியர்கால பெருமாள் சிலைகள் கண்டுபிடிப்பு
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!