முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் 445 விடுதிகள் மேன்ஷன்களில் அதிரடி சோதனை: 3 தலைமறைவு குற்றவாளிகள் கைது
2022-09-27@ 02:16:13

சென்னை: சென்னையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 445 விடுதிகள், மேன்ஷன்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கொலை, கொலை முயற்சி, ஆள்கட்டத்தல் உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி வார இறுதி நாட்களில் சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள விடுதிகள், மேன்ஷன்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள 445 விடுதிகள், மேன்ஷன்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள், ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்றும் அனுமதியின்றி மற்றும் விசா காலம் முடிந்து வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளனரா என்றும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாநகரம் முழுவதும் 98 முக்கிய இடங்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் அமைத்து சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த வாகன சோதனையில், மது போதை, விதிமீறல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிககையாக 2 நபர்கள் மீதும், திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகள் மீதும், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தது தொடர்பாக 2 வழக்குகள், குட்கா விற்பனை செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!