ஓடும் பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம் செய்த பள்ளி மாணவன் கைது: சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் போலீஸ் நடவடிக்கை
2022-09-27@ 02:07:50

சென்னை: தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த மாதம் பள்ளி சிறுவன் ஒருவன் பேருந்தில் தொங்கிக்கொண்டு சாலையில் காலை தேய்த்துக்கொண்டு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், சமூக ஆர்வலர் ஒருவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் அந்த வீடியோவை வைத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் பிராட்வேயில் இருந்து மணலியை நோக்கி செல்லும் மாநகர பேருந்தில் (தடம் எண் 44) தொங்கியபடி, சாலையில் காலை தேய்த்து தொங்கிக்கொண்டு சென்றது திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்த 17 சிறுவன் என்பதும், கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த சிறுவனை பிடித்து தண்டையார்பேட்டை போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது தான் செய்த தவறை அந்த சிறுவன் நீதிபதி முன் ஒப்புக்கொண்டு இனி இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன் என்று கூறினான். மேலும் நீதிபதி மீண்டும் சிறுவன் வரும் 10ம்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார். மேலும், ரயில் மற்றும் பேருந்துகளில் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் தொங்கிக்கொண்டும், கத்தியை வைத்து தேய்த்துக்கொண்டும் பயணிகளை மிரட்டி செல்வது சமீப காலமாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வருகிறது. இச்சம்பவத்தால் பயணிகள் பயப்படவும் செய்கிறார்கள். எனவே காவல்துறையினர் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி