பக்தர்களிடம் செல்போன் திருட முயன்றவர் சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தற்கொலை
2022-09-27@ 00:53:23

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் ஓரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (41). இவர், நேற்று காலை 6 மணியளவில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களிடம் செல்போன் திருட முயன்றதாக கோயில் காவலாளிகள் பாலாஜி, குரு ஆகியோர் பிடித்து சமயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது செல்போன் திருட முயன்றதாக வழக்கு பதிந்து லாக்கப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட முருகானந்தம், கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
பின்னர் பொது கழிவறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் திரும்பி வராததால் போலீசார் சந்தேகம் அடைந்து, கழிவறை கதவை தட்டி பார்த்தனர். பலமுறை தட்டியும் கதவு திறக்கவில்லை. இதனால் போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் கம்பியில் முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், முருகானந்தம் மீது ஏற்கனவே அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு அவரது தாயை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் இவருக்கு பிடிவாரன்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. குடிபோதைக்கு அடிமையான முருகானந்தம் கடந்த 10 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து சென்றதும் தெரிய வந்தது. இதுபற்றி நேரில் விசாரித்த திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் கூறும்போது, கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எஸ்பி சுஜித்குமார் கூறுகையில், பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது துறை ரீதியான நடக்கடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags:
Devotee cell phone theft Samayapuram police station under investigation suicide பக்தர் செல்போன் திருட சமயபுரம் காவல் நிலைய விசாரணை கைதி தற்கொலைமேலும் செய்திகள்
தமிழக வனத்துறையின் முதல் மோப்பநாய் சிமி உயிரிழந்தது: வனத்துறை மரியாதையுடன் உடல் அடக்கம்
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிக்கு களக்காடு புலிகள் காப்பகத்தில் 30 இடங்களில் 60 அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தம்
கொடைக்கானலின் பசுமைக்கு ஆபத்து; காட்டுத்தீயின் கோரத்தால் கட்டாந்தரையானது வனம்: உணவின்றி திண்டாடும் வனவிலங்குகள்
கீழடி அருகே திருப்புவனம் பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு
பதனீர் சீசன் துவக்கம் மாவட்டத்தில் கருப்பட்டி தயாரிப்பு பணி மும்முரம்: பனை மேம்பாடுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
பார்த்திபனூர் அருகே பாண்டியர்கால பெருமாள் சிலைகள் கண்டுபிடிப்பு
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!