ரூ.814 கோடி கருப்பு பண விவகாரத்தில் அனில் அம்பானி மீது நடவடிக்கைக்கு தடை
2022-09-27@ 00:40:27

மும்பை: வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 8ம் தேதி ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், அனில் அம்பானி வேண்டும் என்றே ஸ்விஸ் வங்கியில் 2 வங்கி கணக்கில் உள்ள ரூ.814 கோடி பணம் குறித்து வருமான வரித்துறையிடம் மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர். வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் கங்காபுர்வாலா, ஆர்.என். லத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது அனில் அம்பானி தரப்பில் ஆஜரான வக்கீல் ரபீக் தாதா, ‘‘ அனில் அம்பானிக்கு எதிரான குறிப்பிட்ட சட்டப்பிரிவு 2015ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் 2006-07 மற்றும் 2010-11 ஆண்டுகளில் நடந்தவை. எனவே அந்த சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’’ என்றார். இதைத் தொடர்ந்து, விசாரணையை நவம்பர் 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மேலும் அதுவரை அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதித்தனர்.
Tags:
Rs.814 crore black money issue Anil Ambani banned ரூ.814 கோடி கருப்பு பண விவகார அனில் அம்பானி தடைமேலும் செய்திகள்
கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு
பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!
வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை: பல இடங்களில் வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!