வக்கீல் போன்று மாறுவேடத்தில் ஆஜரான நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
2022-09-26@ 14:58:26

புதுடெல்லி: வக்கீல் போன்று மாறுவேடத்தில் ஆஜரான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் மூலம் பலவகைகளில் ஆதாயம் அடைந்ததாக கூறியுள்ளது.
இந்த பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் கடந்த 14ம் தேதி விசாரணைக்காக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜரானார். இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடுத்த முன்ஜாமின் மனு, இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், வழக்கறிஞர்களை போன்று வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்தவாறு மாறுவேடத்தில் நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது.
இவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ரூ.50,000 பிணை தொகையை செலுத்தி ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதால் தற்போதைக்கு கைது நடவடிக்கையில் இருந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் தப்பியுள்ளார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் விரைவில் 6ஜி தொலை தொடர்பு சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு!!
திடிரேன பற்றி எரிந்த குழந்தைகள் ஐசியூ: நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின
பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி: உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜக முடிவு
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500-ஆக உயர்வு: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்
சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை எப்போது?.. ஒன்றிய அரசு பதில்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமை மசோதா: அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!