துரைப்பாக்கம் பகுதியில் கோயில் நிலத்தில் திரியும் பன்றிகள்: பிடிக்க வலியுறுத்தல்
2022-09-26@ 04:36:48

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீசெங்கழுநீர் விநாயகர், பிடாரி அரியாத்தம்மன், வேம்புலி அம்மன், செங்கழனியம்மன், கங்கையம்மன் கோயிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சவுக்கு மரங்கள் மற்றும் முட்புதராக காட்சியிளிக்கிறது. இங்குள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் சிலர் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை இந்த இடத்தில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த இடத்தில் சுற்றித் திரியும் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைவதால், பொதுமக்கள் காய்ச்சல் பீதியில் உள்ளனர்.
சிலர் இந்த இடத்தை இயற்கை உபாதையை கழிப்பதற்கு உபயோகிக்கின்றனர். இரவில் மர்ம நபர்கள் இந்த இடத்தில் சமூக விரோத செயலில் ஈடுபடுவதால், பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, இங்குள்ள பன்றிகளை அகற்றுவதோடு, இந்த இடத்தை தூய்மையான முறையில் வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!