SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அட்டர்னி ஜெனரல் பதவி வேண்டாம் ரோத்தகி அறிவிப்பு

2022-09-26@ 02:43:08

புதுடெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக (ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞர்) கே.கே.வேணுகோபால் இருந்து வந்தார். இவர் கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரின் பதவி காலம் 2020ம் ஆண்டுடன் முடிந்தது. இதையடுத்து, அவரின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. ஜூன் மாதம் வேணுகோபாலின் பதவி காலம் நிறைவடைந்தது. வேணுகோபாலுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று  கூறப்பட்டது. ஆனால்,  91 வயதானதால்  அவர் மீண்டும் பதவி நீட்டிப்பை விரும்பவில்லை. இதனால், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகிக்கு ஒன்றிய அரசு அப்பதவியை வழங்கியது. ஆனால், இந்த பதவியை ஏற்க, நேற்றிரவு ரோத்தகி மறுத்து விட்டார். இதற்கான காரணங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்