மாநிலம் முழுவதும் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை
2022-09-25@ 00:41:11

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து 17 மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றம் போலீஸ் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை அடுத்த தாம்பரம், மதுரை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பாஜ, ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் வேண்டும் என்றே சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கலாம் என்று திட்டமிடுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் உள்துறைச் செயலாளர் பணீந்திரரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் கோவை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 17 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்கள் ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவது, வாகனச் சோதனை, சந்தேக இடங்களில் சோதனை நடத்துவது, சந்தேக நபர்களை கண்காணிப்பது, தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய உத்தரவுகளை தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்ைன நகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் கூடும் ரயில், பஸ் நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கவர்னர் மாளிகை, பாஜ அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், லாட்ஜ்களில் சோதனை நடத்தப்பட்டன. நேற்று இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபட்ட 10க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:
State Defense Law Order Police Officer Chief Secretary Counsel மாநிலம் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு போலீஸ் அதிகாரி தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனைமேலும் செய்திகள்
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டிடம் கட்ட தடையின்மை சான்று: பேரவையில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி வலியுறுத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி