SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்ஐஏ சோதனையால் போராட்டம் சென்ட்ரலில் ரயில் பயணிகளிடம் சோதனை

2022-09-25@ 00:09:38

சென்னை: என்ஐஏ சோதனை காரணமாக, பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருவதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக என்ஐஏ அதிகாரிகள் பாப்புலர் ப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதை கண்டித்து, பாஜவினர் வீடுகள், அலுவலகங்கள், கார் ஆகியவை தாக்கப்படுவது, பெட்ரோல் குண்டு வீசுவது என பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதன் எதிரொலியாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும், அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கவும் சென்ட்ரல் ரயில்வே காவல் உதவி ஆணையர் முத்துக்குமார் மேற்பார்வையில், ஆய்வாளர் சசிகலா தலைமையில் போலீசார் சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவாயில், நடைமேடை 6 மற்றும் 8, 9 ஆகிய பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இதன் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

  • fredddyyy326

    தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!

  • dubai-helipad

    துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்