கலவரத்தில் பலியானால் ரூ.5 லட்சம் இழப்பீடு; பாலியல் குற்றவாளிகளுக்கு இனிமேல் முன்ஜாமின் கிடையாது: உத்தரபிரதேசத்தில் புதிய சட்டங்கள் நிறைவேற்றம்
2022-09-24@ 19:36:49

லக்னோ: உத்தரபிரதேசத்தில் இனிமேல் பாலியல் குற்ற வழக்கில் கைதானவர்களுக்கு முன்ஜாமின் கிடைக்காது. கலவரத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் அதுதொடர்பான கொலைகள் நடக்காத நாட்களே இல்லை என்று சொல்லலாம்.
சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் கூட பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில் உத்தரபிரதேச சட்டப் பேரவையில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில சட்டமன்ற விவகாரங்கள் அமைச்சர் சுரேஷ் கன்னா கூறுகையில், ‘பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இனிமேல் முன்ஜாமீன் கிடைக்காது. குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த மசோதாவை சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவின்படி குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 1973-இன் பிரிவு 438ல் திருத்தம் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. போக்சோ சட்டம் போன்றவை இருந்தாலும் கூட பெண்களிடம் தவறாக நடந்து கொண்டாலும் கூட, இச்சட்டத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும். சாட்சியங்களை அழிப்பது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை தாக்குவது, அவர்களை அச்சுறுத்துவது போன்றவற்றை இந்த சட்டத் திருத்தம் மூலம் தடுக்க முடியும். பொதுச் சொத்துக்களை அழிப்பவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிப்பது தொடர்பான திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்’ என்றார்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி ட்வீட்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை தொடங்கியது.! தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ‘பிஎப்ஐ’ மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!