புனித நகரமான மதீனாவில் புதிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு: சவுதி ஆய்வு மையம் தகவல்
2022-09-24@ 18:57:54

மதீனா: புனித நகரமான மதீனாவில் அதிக அளவில் தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் 5 ஆயிரத்து 300 சுரங்கங்கள் உள்ளன. தங்கம், செம்பு உள்ளிட்ட உலோகங்கள், உலோகம் அல்லாதவை, இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்களும் சுரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் சவுதி அரேபியா அரசின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மதீனாவின் அருகாமையில் உள்ள அபா-அல்-ரஹா எல்லையில் தங்கம் மற்றும் செம்பு கற்களால் ஆன பெரிய சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல், அல் மடிக், அல் ஃபரா, மதீனா ஆகிய இடங்களிலும் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய சுரங்கங்கள் கண்டுபிடிப்பால் சவுதி அரேபியா மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கவர முடியும். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!