புழல் பகுதிகளில் உள்ள தெரு பெயர் பலகை உடைப்பு
2022-09-24@ 15:21:10

புழல்: புழல், காவாங்கரை, கன்னடபாளையம், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், கலெக்டர் நகர், புத்தகரம், சூரப்பட்டு, சண்முகபுரம், லட்சுமிபுரம், ரெட்டேரி, கடப்பா சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரும்பு பைப்பிலான நவீன தெரு பெயர் பலகைகள் பொருத்தப்பட்டன. நாளடைவில் சிலர், இந்த தெரு பலகைகளில் போஸ்டர் ஒட்டியும் உடைத்தும் நாசமாக்கினர். தற்போது மேற்கண்ட வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெரு பெயர் பலகைகளும் காணாமல் போய்விட்டன.
இதனால் இப்பகுதிக்கு புதிதாக வருபவர்கள் மற்றும் தபால்துறை ஊழியர்கள், தாங்கள் செல்ல வேண்டிய தெருக்களை அறிய முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தெரு பலகைகளை சீரமைக்கும்படி மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் தாமதப்படுத்துகின்றனர். எனவே, காணாமல் போன தெரு பலகைகளை மீண்டும் பொருத்தி சீரமைக்க மாநகராட்சி உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி