SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவிகளை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

2022-09-24@ 14:25:31

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள சிலிப்பி என்ற கிராமத்தில் கோவில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் திருவிழாவை காண வந்திருந்தனர். இந்த திருவிழாவிற்கு வந்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்த பிரவின் (24), வீரசோழனை சஞ்சய் (19), மேலப்பருத்தியூர் பூப்பாண்டி (19) ஆகிய மூன்று பேரும், மது போதையில் எழுவனூர் கிராமத்திற்கு பள்ளி சென்று கொண்டிருந்த மாணவிகளை ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த கிராம மக்கள் 3 இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மண்டலமாணிக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்