கோலாலம்பூரில் இருந்து வந்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது
2022-09-24@ 14:22:38

மீனம்பாக்கம்: அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மன்பிரீத்சிங் (30). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பல இடங்களில் தேடியும், கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதைத் தொடர்ந்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக அரியானா போலீசார் அறிவித்தனர். மேலும், அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதித்தனர். அதில், அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, அரியானா மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி மன்பிரீத்சிங் என தெரியவந்தது.
அவரை மடக்கி பிடித்து, விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அரியானா மாநில போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு வலை
பலாத்காரம் செய்து ஆசிரியை கொலை ஏரிக்கரையில் நிர்வாணமாக புதைப்பு: 20 நாளுக்கு பிறகு ஆட்டோ டிரைவர் கைது
பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி