3வது நபருடன் தாய் ஓட்டம் பிடித்த நிலையில் கள்ளக்காதலியின் மகன், மகளை சீரழித்த காமக்கொடூரனுக்கு போலீஸ் வலை: உடந்தையாக இருந்த பாட்டி கைது
2022-09-23@ 18:06:41

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். அவரது கணவர் கேரள மாநிலம் அம்புரி பகுதியை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 14, 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். அந்த பெண் தனது 3 குழந்தைகளுடன் பத்துகாணி பகுதியில் உள்ள 58 வயதான தாயாரின் வீட்டில் வசித்து வந்தார்.
அப்போது கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த டிஜேஷ் என்ற உண்ணி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பிறகு டிஜேஷ் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கி குடித்தனம் நடத்தினர். மேலும், பெண்ணின் தாய் மற்றும் 3 குழந்தைகளையும் டிஜேஷ் பராமரித்து வந்தார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நெருங்கி பழகிய விவகாரம் டிஜேசுக்கு தெரிய வந்தது. உடனே கள்ளக்காதலியிடம் அதுபற்றி கேட்டு தகராறு செய்துள்ளார். இதையடுத்து, அந்த இளம்பெண் 2வது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
இருப்பினும் டிஜேஷ் வேலைக்கு சென்று கள்ளக்காதலியின் தாய் உள்பட 3 குழந்தைகளையும் கவனித்து வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் டிஜேசுக்கு கள்ளக்காதலியின் 15 வயது மகள் மீது ஆசை வந்துள்ளது. சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, பாட்டியிடம் நடந்ததை கூறினார். ஆனால் அவரோ, இந்த சம்பவத்தை வெளியே கூறினால் வெட்கக்கேடு. டிஜேஷ் தான் நமக்கு தேவையான உதவி செய்து வருகிறார்.
எனவே அவரை பகைத்துக் கொள்ளாதே என கண்டித்துள்ளார். இதனால் சிறுமியும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டிஜேஷ் கடந்த 4 மாதங்களாக சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அதேபோல் சிறுமியின் 14 வயது தம்பியிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். இந்த நிலையில் சிலதினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் இதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும் டிஜேசை அவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த டிஜேஷ் அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசியுள்ளார். இதையடுத்து அந்த பெண், சிறுமியை அழைத்துகொண்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு போனார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறியபடி புகார் அளித்தார். இதுகுறித்து டிஜேஷ் மற்றும் சிறுமியின் பாட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக சிறுமியின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் டிஜேஷ் கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.
அந்த வீட்டில் இருந்த சிறுமியின் பாட்டியை, பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய டிஜேசை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.
Tags:
3வது நபருடன் தாய் ஓட்டம் கள்ளக்காதலியின் மகன் மகளை சீரழித்த காமக்கொடூரன் உடந்தையாக இருந்த பாட்டி கைதுமேலும் செய்திகள்
பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் விஏஓவுக்கு 4 ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை
அழகியை பழக வைத்து தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் உள்பட 4 பேர் கைது: கார், பைக் பறிமுதல்
ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து டாக்டரை தாக்கி ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்த 4 பேர் கைது: துப்பாக்கி பறிமுதல்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!