போதை பொருள் விழிப்புணர்வு போட்டி
2022-09-21@ 02:43:44

திருத்தணி: போதைபொருள் விழிப்புணர்வு குறித்து போட்டிகள் நடந்தது. திருத்தணி சுதந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் சமுதாய பிரச்னைகள் மற்றும் கேடுகள் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஒவியம் போன்ற போட்டிகள் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் சியாமளாரங்கநாதன் தலைமை வகித்தார்.
சென்னை பல்கலைக் கழக முன்னாள் ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் பேராசிரியருமான வி.ரங்கநாதன் பங்கேற்று, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாணவர்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போதை விழிப்புணர்வு குறித்து நடந்த கட்டுரை, பேச்சு ஒவிய போட்டிகளில் முதல் இடங்களை பிடித்த மாணவமாணவியருக்கு பரிசுகளை பள்ளி தாளாளர் சியாமளாரங்கநாதன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் துரைகுப்பன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி