SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின் கட்டண உயர்வு: உச்ச நீதிமன்றத்தில் 23ல் விசாரணை

2022-09-21@ 00:17:36

புதுடெல்லி: மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் கேவியட் மற்றும் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பின் மேல்முறையீட்டு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் நாளை மறு நாள் விசாரிக்க உள்ளது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி அமர்வு, ‘‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்த்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அவரை நியமிக்கும் மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம்’’ என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசாணை செல்லும் என பல்வேறு கோரிக்கைகள் கொண்ட உத்தரவை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த கேவியட் மனு மற்றும் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு ஆகிய அனைத்தும் நாளை மறுநாள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்