25 ஆண்டாக போலீசுக்கு தண்ணி காட்டிய கொலை குற்றவாளி கைது: டெல்லி போலீசார் அதிரடி
2022-09-19@ 17:23:30

லக்னோ: கிட்டதட்ட 25 ஆண்டுக்கு முன் நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை டெல்லி போலீசார் கைது செய்தனர். கடந்த 1997ம் ஆண்டு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் கிஷன் லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி தலைமறைவான நிலையில், அவரை கடந்த 25 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். ஆனால் கொலையாளி இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டம் கான்பூர் கிராமத்திற்கு போலீசார் சென்றனர்.
அங்கு காப்பீட்டு நிறுவன முகவராக செயல்பட்டு வந்த கொலையாளி ராமுவை போலீசார் அடையாளம் கண்டனர். அவனின் பின்னணி குறித்து சுற்றுவட்டாரப் பகுதியில் போலீசார் விசாரித்தனர். தற்போது லக்னோவின் ஜானகிபுரத்தில் இ-ரிக்ஷா ஓட்டிவந்த ராமுவை, அவரது மகன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ‘இ-ரிக்ஷா ஓட்டிவந்த ராமு, தனது ெபயரை அசோக் யாதவ் என்று மாற்றிக் கொண்டு 25 ஆண்டாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார். தற்போது கைது செய்யப்பட்ட அவர், கிஷன்லாலைக் கொன்றதை ஒப்புக் கொண்டார்’ என்றனர்.
மேலும் செய்திகள்
ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பாஜ நிர்வாகி ஹரிஷ் கைது: ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது: உடலில் கடித்து காயப்படுத்திய கொடூரம்
ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
மணிப்பூரில் இருந்து கடத்தி வந்த 9 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பவுடர் பறிமுதல்: 2 பேர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை
புதிய இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய அதிகாரி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி