ஆவடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம்; அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு
2022-09-19@ 17:17:20

ஆவடி: ஆவடி மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் சா.மு.நாசர் இன்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் 1 முதல் 5 வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை சிற்றுண்டி திட்டத்தை கடந்த 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்று முதல் அனைத்து பள்ளிகளில் இந்த திட்டம் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மாநகராட்சி தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாட்டை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று காலை ஆய்வு செய்தார்.
அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தார். பின்னர், உணவின் தரம், சுவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, ‘சாப்பாட்டின் தரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, ஆவடி மேயர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: காவல்துறை ஐகோர்ட்டில் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!