வார விடுமுறையையொட்டி கும்பக்கரை அருவியில் உற்சாக குளியல் -குவியும் சுற்றுலாப் பயணிகள்
2022-09-19@ 14:12:29

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மாத இறுதியில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கடந்த 31ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் அறிவித்தனர். கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சீரானது.இதையடுத்து, கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
அதிலும் வார விடுமுறையான நேற்று சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தேனி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும், அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, முதலுதவி உபகரணங்கள் மற்றும் செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!