ஷாருக்கானுடன் 250 பெண் ஸ்டன்ட் கலைஞர்கள் மோதல்: சென்னையில் படப்பிடிப்பு
2022-09-17@ 02:21:36

சென்னை: அட்லி இயக்கும் ஜவான் படத்துக்காக 250 பெண் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஷாருக்கான் மோதும் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜவான்’. நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் நாயகிகளாக நடித்து வரும் இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் உருவாகி வருகிறது. ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை அருகே பிரமாண்டமான செட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் 200 முதல் 250 பெண் ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர். ஷாருக்கானுடன் அவர்கள் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பெண் ஸ்டன்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் பலர் வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் என கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!